சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகின்ற சித்திரை திருவிழா இந்த வருடமும் வென்னவத்தை படை தலைமையக அருகில் டிபெட் எஸ் மஹிந்த வித்தியாலய மைதாணத்தில் பிரமாண்டகரமாக 2016.04.30 ம் திகதி நடைபெற்றது.
வெலிசர, சேறுபிட, கடுநாயக மற்றும் மேல் மாகாண படை தலைமையகங்களில் சேவை செய்கின்ற வீர வீராங்கணைகளின் பங்குபற்றலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மறைந்திருக்கும் விருந்தாளியை கண்டுபிடிதல், வழுக்கு மரம் ஏறுதல், கயிரு இழுத்தல் ஆண்கள் மற்றும் பெண்கள், முட்டை பிடித்தல், தலையனை அடி, ஓரே இடத்தில் சைக்கிள் மிதித்தல், புது வருட பெண் அழகி மற்றும் ஆண் அழகன் தேர்வு, இசை கதிரை போட்டி, தடை தாண்டி ஓடுதல், குருடருக்கு தயிரு ஊட்டுதல், குருடர் முட்டி உடைத்தல், ஒரே இடத்தில் சுற்றுதல் மற்றும் ஒரே இடத்தில் ஓடுதல் போன்ற பழங்கால விழளயாட்டுக்கள் நடைபெற்றன.
இந்த சித்திரை திருவிழாவிற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்கள், உதவி பணிப்பாளர் நாயகம் றியர் அத்மிரால் ஷேமால் பிரனாந்து அவர்கள், சேவா வனிதா பிரிவின் தலைவி லக்ஷ்மி பல்லேகம அவர்கள், பணிப்பாளர் சபை மற்றும் கட்டளை அதிகாரிகள் கலந்துகொண்டனர்