படை வீரரை ஒழுக்க கேடுடையவராகவும் படை வீராங்கனையான மனைவியை அவமதிக்கின்றவகையிலும் எடுக்கப்பட்ட 'யுத்தம் பற்றிய திரைப்படத்தை' ரியர் அட்மிரல் வீரசேகர கடுமையாக ஆக்ரோசமாக விமர்சித்துள்ளார். அவர் பல தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்த திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனோபாவம் நாட்டுக்கு சதிசெய்யக் கூடியது என அவர் நம்புகிறார். தொட்டகமுவ ஸ்ரீ ராஹூல (15ஆம் நூற்றாண்டு), நூதன பரவி சந்தேசய (நவீன புறாவிடு தூது), சாகரய சஹ கெஹனிய (சமுத்திரமும் பெண்ணும்) என்னும் தலைப்புகளில் மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
அவர் கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில் பௌத்த அமைப்பொன்று திருகோணமலை நகரில் புத்தர் சிலையொன்றை வைத்தபோது எல்.ரி.ரி இயக்கத்தினர் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு பிரச்சினையை ஏற்படுத்தியபோது அதைத் தடுப்பதில் பிரதான பங்காற்றினார். இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு உச்சகட்டத்தை அடைந்ததால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உடனடியாக அவரை அங்கிருந்து அகற்றினார். ஆனால் அதைத் தொடர்ந்து பணியாட் தொகுதி பிரதிப் பிரதானி என்ற புதிய பதவியை உருவாக்கி அவரை அப்பதவியில் நியமித்தார்.
இலங்கை கடற்படையில் அவர் ஆற்றிய அதிசிறந்த சேவையைக் கௌரவிக்குமுகமாக ரண விக்கிரம பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம், உத்தம சேவா பதக்கம், இலங்கை குடியரசின் இராணுவ சேவை பதக்கம், இலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு பதக்கம், இலங்கை இராணுவ சேவையின் நீண்ட சேவைகள் பதக்கம், ஜனாதிபதியின் ஆரம்ப பதக்கம், 50வது சுதந்திர தின ஞாபகார்த்த பதக்கம், வடக்கு கிழக்கு இராணுவ நடவடிக்கை பதக்கம், பூர்ணபூமி பதக்கம் ஆகிய பதக்கங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
பணியாட் தொகுதி தலைவர், இலங்கை கடற்படையின் முதலாவது பணியாட் தொகுதி பிரதித் தலைவர், செயற்பாடுகள் பணிப்பாளர் நாயகம், கடற்படை கருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், சேவைகள் பணிப்பாளர் நாயகம் (ஆளணி, பயிற்சி, கருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் நலனோம்பல்) வடக்கு கடற்படைப் பிரதேச தளபதி, கிழக்கு கடற்படைப் பிரதேச தளபதி, தெற்கு கடற்படைப் பிரதேச தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு எதிரிகள் சுற்றிவளைத்திருந்த பூநகரியில் படையினரை இறக்கி அங்கு சிக்கிக்கொண்டிருந்த சுமார் 400 இராணுவ வீரர்களைக் காப்பாற்றியமைக்காக ரண விக்கிரம வீர விருது வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு அட்மிரல் வீரசேகர வடக்கு கடற்படை பிரதேசத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இலங்கை கடற்படையின் முதலாவது விரைந்து தாக்கும் கப்பலின் கட்டளைத் தளபதியாகவும் கரையோர பாதுகாப்பு ரோந்து படகு பிரிவின் தளபதியாகவும் இருக்கின்றார். ரியர் அட்மிரல் வீரசேகர எல்.ரி.ரியின் சிறுவர் போராளிகள், சர்வதேச கடப்பாடுகள், இலங்கையில் பயங்கரவாதமும் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அதனால் ஏற்படும் தாக்கமும் என்ற ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து சர்வதேச அரங்கில் பாராட்டுப் பெற்றார்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இலங்கை கடற்படையில் கெடட் அலுவலராக இணைந்தார். அவர் அமெரிக்காவின் நியுபோர்ட், ரோடே தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கடற் போர் கல்லூரி, இந்தியா, புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி என்பவற்றில் கடற் பணியாட்டொகுதி பாடநெறி உள்ளிட்ட பல பாட நெறிகளைப் பின்பற்றியுள்ளார். அவர் பௌத்த தத்துவத்தில் எம்.ஏ பட்டமும் பௌத்த தத்துவ எம் பில்(M Phil) பட்டமும் பெற்றுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் கப்பலோட்டல் ரோயல் நிறுவகத்தின் அங்கத்தவராக இருக்கின்றார். ஹவாயில் உள்ள பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் நிலையம், ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி யில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் திறமுறை கற்கைக்கான கிழக்கு தெற்காசிய நிலையம் என்பவற்றின் பழைய மாணவராவார்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர