ஹுணுபிடிய கங்காராம ஆலயத்தில் நடைபெற்ற நவம் மாபெரும் பெரஹெரவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட மலர் பெரஹெர 2018.02.23ம் திகதி பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் பங்குபற்றலில் நடைபெற்றது.
70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பங்குபற்றிய அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்களை பாராட்டும் வகையில் கொழும்பு மகானாம வித்தியாலயத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் உட்பட அமைச்சர்களின் பங்குபற்றலில் காலி முகத்திடலில் நடைபெற்ற 70வது சுதந்திர தின விழாவிற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள அணிவகுப்பு மிகவும் கண்னியமான முறையில் நடைபெற்றது.
கிளிநொச்சி வட்டகச்சி நெல் பயிர் திட்டத்தில் அறுவடை செய்தல் நிகழ்வானது ஹிந்து கலாச்சாரத்திற்கு ஏற்ப பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 2018.01.20ம் திகதி நடைபெற்றது. விஷ்வமடு, கிளிநொச்சி, முள்ளைத்தீவு படை தலைமையகங்களில் கர்பணி தாய்மார்களுக்காக உலர் உணவு பொதியொன்று வழங்குதல்இ பிள்ளைகளுக்காக அப்பியாச புத்தகங்கள் வழங்குதலும் நடைபெற்றது.
தைப்பொங்கள் தின விழாவை முன்னிட்டு முள்ளைத்தீவு பாரதிபுரத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற கோவில் வளாகத்தினை திறந்து வைத்து கடவுள்களின் 08 படங்கள் நிருவப்பட்டுள்ளது
சேறுவிலை படை தலைமையகத்தின் அர்ப்பணிப்பின் மூலம் பன்சல் கொடல்ல உப படை தலைமையகத்தில் நிர்மானிக்கப்பட்ட பேக்கரி பயிற்சி தலைமையகம் மற்றும் விற்பனை நிலையம் 2018.01.13 ம் திகதி பணிப்பாளர் நாயகம் அவர்களின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அதே தினத்தன்று விவசாய பண்ணைகள் கண்கானிப்பும் நடைபெற்றது.
பொலொன்னறுவை படை தலைமையகத்தின் படை வீர வீராங்கனைகளின் முயற்சியினால் நிர்மானிக்கப்பட்ட கலாச்சார கட்டிடம் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களினால் 2018.01.06ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி அவர்களின் கருத்திற்கமைய நடாத்தப்படுகின்ற ரோபா வேளைத்திட்டத்தின் கீழ், பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் அறிவுத்தலின் கீழ், பொலொன்னறுவை படை கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், பொலொன்னறுவை படை தலைமையகத்தின் 600 பேர்கொண்ட படை வீரர்களின் பங்குபற்றலில், 2018.01.06ம் திகதி மெதகம ZD கால்வாய் சரணாலயத்தில் 25 ஏக்கர் அளவுடைய நிலப்பரப்பளவில் 6222 செடிகள் நடப்பட்டது.
ஹிங்குரக்கொட சுகாதார வைத்திய அதிகார அலுவலகத்தின் எல்லை பிரதேசத்திற்குரிய தம்பலவெவ குடும்ப சுகாதார சேவை பிரதேச எல்லையில் வசிக்கும் மக்களின் குழந்தைகள், பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாயமார்களுக்காக மருத்துவங்கள் நடாத்தப்படு வருகின்ற அலுவலகத்திற்காக அலுவலக உபகரணங்கள் 2018.01.05ம் திகதி நன்கொடையாக பணிப்பாளர் நாயகம் அவர்களின் கரங்களினால் வழங்கப்பட்டது.
சிவில் பாதுகாப்புத் திணைகளத்தின் இயக்குனர் குழு மற்றும் பணியாளர்கள் புத்தாண்டின் சுப தருனத்தில் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.