சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரால் நிர்மால் கொஸ்வத்த ஆர்.எஸ்.பீ அவர்கள் 2018 ஜூன் மாதம் 06ம் திகதி மகா சங்கரத்ன செத் பிரித் சஜ்தாயனா நிலையத்தில் பம்பலபிட்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தில் பதவியேற்பு நடைபெற்றது.
கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வி பயின்று கெடட் அதிகாரியாக 1981ம் ஆண்டு இரானுவத்தில் சேர்ந்தார். அவர் இரண்டாம் லுதினன் பதவிற்கும், பின் முறையே லுதினன், கப்டன், மேஜர், லுதினன் கேர்னல் பதவிகளுக்கும், பின்பு கேர்னல், பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனராலாக பதவியுயர்வு வழங்கப்பட்டது.
30 ஆண்டுகளாக நடைபெற்ற பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் செயற்பாடுகளுக்கு ஆற்றிய பங்களிப்பை முன்னிட்டு ரனசூர பதக்கத்தை பெற்ற இவ்வதிகாரி பணியாளர் அதிகாரி படிப்பு, கமான்டர் படிப்பு, ஒழிந்திருந்து துபாக்கி சுடும் படிப்பு, விஷேட பிரபுக்களின் பாதுகாப்பு படிப்பு, எதிர் பயங்கரவாதிகள் மற்றும் பிணைக்கைதிகளை காப்பாற்றும் படிப்பு, பரசூட் மற்றும் கமான்டர் படிப்பு - அமெரிக்கா, இரானுவ பொலிஸ் படிப்பு - இந்திய, மலைகளில் சன்டையிடல் செயற்பாட்டு படிப்பு - பாகிஸ்தான், இரானுவ நீதி பற்றிய படிப்பு – அமெரிக்கா, போன்ற பல படிப்புக்களை கற்றதன் மூலம் சிறந்த அறிவுச் செல்வம் உடைய உயர் அதிகாரியாகும்.